ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

யானைகளின் உயிர் அவ்வளவு மலிவானதுவா

மரணப் போராட்டத்தில் உயிரினங்கள்?

எம்.எஸ்.செல்வராஜ்

natpu
இயற்கையின் கோரத் தாண்டவம் இன்று உலகையே உலுக்கியிருக்கிறது. தமிழகக் கரையெங்கும் பிணங்கள் அழுதி மிதக்கின்றன. காற்றெங்கும் மரண ஓலம்... என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நிற்கும் மக்கள். இதற்கு யார் காரணம்?
இயற்கை மட்டுமா? ஏன் இந்த திடீர் சீற்றம்! இது கரைக்கு மட்டும்தானா? நாளை நமக்கும் வராதா? உலகெங்கும் அணு உலைகள். ஜப்பானில் 1942ல் ஹிரோஷிமாவில் துவங்கி இன்று பொக்ரான் புத்தர் சிரிப்புவரை பல அணு வெடிப்புகள், கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகள் அமெரிக்காவின் யுத்தத் தாண்டவம் வல்லரசுகளின் ஆயுதபேரம், வேதியியல் கழிவுகள், பெட்ரோல் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், நகரமெங்கும் காங்கிரீட் காடுகள், ஆற்றில் மணல் கொள்ளை, காடழிப்பு, கடலில் கழிவைக் கழித்தல், கடலில் அணுகுண்டு சோதனை, பயிரெங்கும் பூச்சிக்கொல்லி, தண்ணீரில்லாமல் அணைக்கட்டுகள் திட்டம்... இப்படியிருந்தால் அப்புறம் ஏன் இயற்கை திருப்பி அடிக்காது.
இந்த நிலையில் நடந்திருக்கும் அனுபவங்களை பாடமாக எடுத்து ஆய்வு செய்வது அவசியம். இயற்கையாக ஏற்படும் சீற்றத்திலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் சமன்பாட்டில்தான் பூமி அமைந்திருக்கிறது. இதை நுணுக்கமாக புரிந்து கொண்டு இயற்கையுடன் இணைந்து வாழும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது அவசியம்.
பூமி அதிர்வு, கடல் கொந்தளிப்பு, சுனாமி, பூகம்பம், பூமி வெடிப்பு, மண் சரிவு, வெள்ளம், புயல், கடும் வறட்சி போன்ற அனைத்து சீற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து, பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொள்ளும் ஆற்றல் காட்டுயிர்களுக்கு உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். கோரத்தாண்டவ சுனாமியில் இருந்து சில சம்பவங்களை கூர்ந்து கவனிப்பது அவசியம். சுனாமி ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வன விலங்குகள் என்றும் இல்லாதவாறு வித்தியாசமான ஒலிகளையும், செயல்பாட்டையும் செய்திருக்கின்றன.
“இயற்கையிலிருந்து அந்நியப்பட்டு போன மனிதனுக்கு இதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அழிந்து போய்விட்டது.” இந்த சுனாமியால் வன விலங்குகள் பாதிக்கப்படவில்லை. அந்தமான் தீவுப் பகுதியில் பவளப்பாறைகளும், அடர்ந்த காடுகளும் உயிரினங்கள் தப்பிக்கக் காரணமாக இருந்துள்ளது. இந்த வகையில் மனித வாழ்வுக்கு மிக அடிப்படையாக இருப்பவை காட்டுயிர்கள்.
இதன் கதி என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம். மேலும் தொடர

http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/animals.php